“சினி​மா​வில் இருந்து விலக நினைத்​தேன்” - நிவேதா பெத்​து​ராஜ் தகவல்

நடிகை நிவேதா பெத்​து​ராஜ்

நடிகை நிவேதா பெத்​து​ராஜ்

Updated on
1 min read

பிரபல இயக்​குநர் சிங்​கீதம் சீனி​வாச​ராவ் இயக்​கத்​தில் உருவாகியுள்ள ‘சிங் கீதம்’ என்ற படம் கடந்த வெள்​ளிக்​ கிழமை வெளியானது.

இதில் நடிகை நிவேதா பெத்​து​ராஜ் முக்​கிய கதா​பாத்​திரத்​தில் நடித்​துள்​ளார். இப்​படத்​தின் வெற்றி விழா ஹைத​ரா​பாத்​தில் நடைபெற்​றது. அதில் பேசிய நிவேதா பெத்​து​ராஜ், திரைத் துறையில் இருந்து விலக முடிவு செய்​திருந்​த​தாகத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்​போது, “கடந்த 2023ம் ஆண்​டில், திரைத்​துறையில்​ இருந்து முற்​றி​லும் வில​கி​விடலாம் என தீவிர​மாக யோசித்​துக்​ கொண்​டிருந்​தேன்.

அந்த நேரத்​தில் எனக்​குத் திரைத்​துறை​யின் மீது ஒரு​வித வெறுப்பு ஏற்​பட்​டிருந்​தது. ஆனால், வாழ்க்கை​யில் சில நேரங்​களில் நாம் எடுக்​கும் தவறான முடிவுகளும், நாம் செல்​லும் சில தவறான பாதைகளும் கூட, இறுதி​யில் நம்மை நல்ல இடத்​துக்​குக் கொண்டு சேர்க்​கும் என்பதை இப்​போது உணர்கிறேன்.

அப்​படி நான் கடந்த பாதைகள் ​தான், இன்று சிங்​ கீதம் சீனிவாசராவ் போன்ற மாபெரும் ஜாம்​ப​வான் இயக்​குநரின் பிளாக் ​பஸ்​டர் திரைப்​படத்​தில் என்னை சேர்த்​திருக்​கிறது. இதற்கு இப்​படத்​தின் தயாரிப்​பாளர் நாக் அஸ்​வினுக்கு நன்​றி. இதற்​காக பெரு ​மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரி​வித்​துள்​ளார்.

<div class="paragraphs"><p><em>நடிகை நிவேதா பெத்​து​ராஜ்</em></p></div>
Maa Behen: சமூகம் உருவாக்கிய ‘சூனியக்காரிகள்’ ரேகா, ஜெயா, சுஷ்மா | திரை தேவதைகள் 21

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in