“5 ஆண்டுகளில் ரூ.3,000 கோடி முதலீடு” - ‘கே.ஜி.எஃப்’ பட நிறுவனத்தின் மெகா ப்ளான்

“5 ஆண்டுகளில் ரூ.3,000 கோடி முதலீடு” - ‘கே.ஜி.எஃப்’ பட நிறுவனத்தின் மெகா ப்ளான்
Updated on
1 min read

“திரைத்துறையில் 5 ஆண்டுகளில் 3,000 கோடி முதலீடு செய்வோம்” என்று ‘கேஜிஎஃப் 1’, ‘கே ஜி எஃப் 2’, ‘காந்தாரா’ படங்களை தயாரித்துள்ள ஹோம்பாலே தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஹோம்பாலே நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஆண்டு எங்களுக்கு சிறந்த ஆண்டாகவும், நிறைவானதாகவும் இருந்தது. இது உங்கள் அன்பு மற்றும் ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து இலக்குகளை எட்டுவோம் என்றும் நம்புகிறேன்.

இந்த புதிய ஆண்டை நாங்கள் தொடங்கும்போது, நீடித்த நினைவாற்றலைக் கொண்டிருக்கக்கூடிய மற்றும் உங்கள் மீது அழியாத தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆழ்ந்த அனுபவத்துடன், அழுத்தமான உள்ளடக்கத்தை தயாரிக்கவிருப்பதாக உறுதியளிக்கிறோம். இந்த ஆர்வத்தை மனதில் கொண்டு, எதிர்வரும் 5 ஆண்டுகளில் 3,000 கோடி ரூபாயை முதலீடு செய்வோம் என்று உறுதியளிக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தற்போது ‘பாகுபலி’ புகழ் நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில், ‘கே ஜி எஃப்’ புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ எனும் திரைப்படத்தையும், தமிழில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்து வரும் ‘ரகு தாத்தா’ என்ற படத்தையும், இயக்குநரும், நடிகருமான பிரித்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் ‘டைசன்’ எனும் திரைப்படத்தையும், ‘சார்லி 777’ புகழ் ரக்‌ஷித் ஷெட்டி இயக்கத்தில் ‘ரிச்சர்ட் ஆண்டனி’ எனும் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in