திரைத்துறையில் 20 வருடங்கள் - நடிகை பாவனா மகிழ்ச்சி

திரைத்துறையில் 20 வருடங்கள் - நடிகை பாவனா மகிழ்ச்சி

Published on

தமிழில், மிஷ்கின் இயக்கிய, ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் அறிமுகமானவர், மலையாள நடிகை பாவனா. அவர் மலையாளத்தில், கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘நம்மாள்’ என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானார். இதை கமல் இயக்கியிருந்தார்.

இந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் பிசியானார் பாவனா. இது வெளியாகி 20 வருடம் ஆகி இருக்கிறது. தனது திரைப்பயணத்தில் 20 வருடங்களைக் கடந்துள்ளது பற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள நடிகை பாவனா, ‘நம்மாள்’ படப்பிடிப்பு தளத்தில் எடுத்த சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in