Published : 14 Nov 2022 09:30 AM
Last Updated : 14 Nov 2022 09:30 AM

“என்ன சொல்றதுன்னே தெரியல” - பூரிப்பில் ரிஷப் ஷெட்டி

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி, இயக்கி நடித்த படம், ‘காந்தாரா’. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டும் இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், “இந்த வெற்றிக்கு நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார் ரிஷப் ஷெட்டி.

அவர் மேலும் கூறும்போது, “இந்தப் படத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் உருவாக்கினேன். வெளியான முதல் நாளே வரவேற்பைப் பெற்றது. மூன்றாவது நாளே, எங்கள் எதிர்பார்ப்பை இந்தப் படம் மிஞ்சும் என்று தெரிந்தது. பிறகு பல்வேறு மொழிகளில் வெளியாகி ஹிட்டானது. இது மிகப்பெரிய வரவேற்பு. இதை ஏற்றுக்கொண்டாலும் என் தலையில் ஏற்றிக்கொள்ள மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x