

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்றழைக்கப்படும் பிலிம்சேம்பருக்கு தேர்தல் நடைபெற்றது.
இதில், தலைவராக ரவி கொட்டாரக்கரா, துணைத் தலைவர்களாக ஜி.பி.விஜயகுமார், டி.எஸ். ராம்பிரசாத், கே.எஸ். ராமகிருஷ்ணா, செயலாளர்களாக டி.ஏ.அருள்பதி, கிருஷ்ணாரெட்டி, பொருளாளராக என்.இராமசாமி (தேனாண்டாள் முரளி) செயற்குழு உறுப்பினர்களாக எஸ்.தாணு, கே.பிரபாகரன், எஸ். கதிரேசன், ஆர்.மாதேஷ், எம்.கபார், என்.விஜயமுரளி உட்பட 44 பேர் பதவி ஏற்றனர். தேர்தல் அதிகாரியாக சி.கல்யாண் பணியாற்றினார்.
பிலிம்சேம்பர் கட்டிடம் கட்ட அரசிடம் அனுமதி பெற உறுதுணையாக இருந்த நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், முன்னாள் தலைவர் காட்ரகட்ட பிரசாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.