

‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்தப் படம், ‘இண்டியானா ஜோன்ஸ்’ போல் இருக்கும் என்றும் உலகம் முழுவதும் இதன் படப்பிடிப்பு நடக்க இருப்பதாகவும் சமீபத்தில் ராஜமவுலி கூறியிருந்தார். அதோடு, 'கிரியேட்டிவ் ஆர்ட்டிஸ்ட் ஏஜென்சி' என்ற ஹாலிவுட் நிறுவனத்துடன் அவர் ஒப்பந்தம் செய்துள்ளார். அந்த நிறுவனம் ஹாலிவுட்படங்களை உலகம் முழுவதும் சந்தைப்படுத்தும் பணியைச் செய்து வருகிறது.
இதற்கிடையே, ராஜமவுலி - மகேஷ்பாபு இணையும் படத்தில், ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் கவுரவவேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர், ‘தோர்’ படம் மூலம் சர்வதேச ரசிகர்களை கவர்ந்தவர். இவர் நடிக்கும் தகவலை படக்குழு உறுதிப்படுத்தவில்லை.