Published : 24 Sep 2022 06:09 AM
Last Updated : 24 Sep 2022 06:09 AM

தொண்டு நிறுவனம் தொடங்கிய கீர்த்தி ஷெட்டி

> ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009-ம் ஆண்டு வெளியான 'அவதார்', வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்தப் படம் நேற்று மீண்டும் வெளியிடப்பட்டது. இந்தியாவில், முன்பதிவில் ரூ.1 கோடி வசூலித்துள்ள இந்தப்படம் இந்த வார இறுதியில் மட்டும் ரூ.5 கோடி வசூலிக்கும் என்கிறார்கள்.

> துல்கர் சல்மான் நடித்த ‘குருப்பு’ படத்தை வெளியிட தடைகோரி எர்ணாகுளத்தைச் சேர்ந்த தாமஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஜனவரி மாதம் வழக்குத் தொடர்ந்தார். இது இப்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. படம் வெளியாகிவிட்டதால் தடைவிதிக்க முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

> நடிகை கீர்த்தி ஷெட்டி, 'நிஷ்னா' என்ற பெயரில் தொண்டு நிறுவனம் தொடங்கியுள்ளார். ஏழைகளுக்கு உதவுவதற்காக இதைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இது தனது நீண்டநாள் கனவு எனக் கூறியுள்ளார்.

> அசோக் செல்வன் நடிக்கும் ‘நித்தம் ஒரு வானம்’ படத்தின் டீசர் நேற்று வெளியானது. அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத் மிகா நாயகிகளாக நடித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x