தமிழில் தொடர்ந்து ஏன் நடிக்கவில்லை? - நடிகர் பிருத்விராஜ் விளக்கம்

தமிழில் தொடர்ந்து ஏன் நடிக்கவில்லை? - நடிகர் பிருத்விராஜ் விளக்கம்
Updated on
1 min read

தமிழில் தொடர்ந்து ஏன் நடிக்கவில்லை என்பதற்கு நடிகர் பிருத்விராஜ் விளக்கம் அளித்தார்.

பிருத்விராஜ், விவேக் ஓபராய், சம்யுக்தா மேனன் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘கடுவா’. 8 ஆண்டுகளுக்கு பிறகு ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ளார். பிருத்விராஜ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுப்ரியா மேனன், மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் லிஸ்டின் ஸ்டீபன் இணைந்து தயாரித்துள்ளனர். மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஜூலை 7-ம் தேதி வெளியாகிறது.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பிருத்விராஜ் கூறியதாவது: தமிழில் குறைவாகத்தான் நடித்துள்ளேன். ‘மொழி’ போன்ற ஒரு படத்தை தமிழ் சினிமாதான் எனக்கு கொடுத்தது. ஆனாலும், சரியான கதை அமையாததால் தொடர்ந்து நடிக்கவில்லை. இப்போது சில இயக்குநர்களிடம் கேட்டிருக்கிறேன். விரைவில் அது நடக்கும். சமீபகாலமாக மலையாளத்தில் சிறந்த கதையுள்ள படங்கள் வருகின்றன. ஆனால், மாஸ் ஆக்‌ஷன் ஜானர் படம் மட்டும் உருவாகவில்லை. ‘கடுவா’ அதுபோன்ற ஒரு படம். கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in