Published : 10 Dec 2021 02:27 PM
Last Updated : 10 Dec 2021 02:27 PM

‘புஷ்பா’ படக்குழுவினருக்கு தங்க நாணயங்கள் வழங்கிய அல்லு அர்ஜுன்

‘புஷ்பா’ படக்குழுவினருக்கு தங்க நாணயங்கள் மற்றும் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார் அல்லு அர்ஜுன்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.

ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் அல்லு அர்ஜுனுடன் நடித்துள்ளார்கள். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் உருவாகியுள்ளது.

இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாடியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் டிசம்பர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் ‘புஷ்பா’ படக்குழுவினர் அனைவருக்கும் தலா 11 கிராம் தங்க நாணயங்களை நடிகர் அல்லு அர்ஜுன் வழங்கியுள்ளார்.

அதுமட்டுமின்றி, அனைத்து தயாரிப்பு பணியாளர்களுக்கும் ரூ 10 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கியுள்ளார். அல்லு அர்ஜுனின் இந்த செயலுக்கு பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x