மிகப்பெரிய அதிர்ச்சியில் இருக்கிறேன் - புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு சூர்யா இரங்கல்

மிகப்பெரிய அதிர்ச்சியில் இருக்கிறேன் - புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு சூர்யா இரங்கல்
Updated on
1 min read

புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார்

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். நேற்று காலை பெங்களூரு சதாசிவநகரில் உள்ள தனது வீட்டின் உடற்பயிற்சி கூடத்தில் புனித் உடற்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கியதாக தெரிகிறது. இதையடுத்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிற்பகல் 3 மணியளவில் புனித் ராஜ்குமார் உயிரிழந்தார். தகவலறிந்து மருத்துவமனை முன்பு திரண்ட ரசிகர்கள், கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

புனித் ராஜ்குமாரின் மறைவு இந்தியத் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுது. பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இந்த இழப்பை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. போய் வாருங்கள் புனித் ராஜ்குமார். என் சகோதரர் மற்றும் சக பயணி. உங்கள் அன்பான நட்பையும், சகோதரத்துவத்தையும் எப்போதும் நான் நினைவில் வைத்திருப்பேன். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். நான் மிகப்பெரிய அதிர்ச்சியில் இருக்கிறேன்.

இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in