ராஜமெளலி படத்தை உறுதி செய்த மகேஷ் பாபு

ராஜமெளலி படத்தை உறுதி செய்த மகேஷ் பாபு
Updated on
1 min read

ராஜமெளலி இயக்கத்தில் நடிக்கவிருப்பதை மகேஷ் பாபு உறுதி செய்துள்ளார்.

ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஆர்.ஆர்.ஆர்'. டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்துக்குப் பிறகு ராஜமெளலி இயக்கவுள்ள அடுத்த படத்தில் மகேஷ் பாபு நாயகனாக நடிக்கவுள்ளார். இந்தக் கூட்டணி குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், இந்தப் படம் குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமுள்ளன.

தற்போது ராஜமெளலி இயக்கத்தில் நடிக்கவிருப்பதை உறுதி செய்துள்ளார் மகேஷ் பாபு. இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

"இந்தி படமாக இருந்தால் சரியான படத்தைச் சரியான நேரத்தில் பண்ண வேண்டும் என்று எப்போதும் விரும்பினேன். அந்த நேரம் இப்போது வந்துவிட்டது என்று நினைக்கிறேன். என்னுடைய அடுத்த படத்தை ராஜமெளலி இயக்குகிறார். இப்படம் அனைத்து மொழிகளிலும் உருவாகிறது."

இவ்வாறு மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in