'ஆர்சி15' படப்பிடிப்பு தொடக்கம்: ராஜமெளலி, ரன்வீர் சிங் வாழ்த்து

'ஆர்சி15' படப்பிடிப்பு தொடக்கம்: ராஜமெளலி, ரன்வீர் சிங் வாழ்த்து
Updated on
1 min read

ஹைதராபாத்தில் 'ஆர்சி15' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் ராஜமெளலி, ரன்வீர் சிங் கலந்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் 50-வது படம் இதுவாகும். இந்தப் படப்பிடிப்பில் ராஜமெளலி, ரன்வீர் சிங், சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை சிரஞ்சீவி க்ளாப் அடித்து துவங்கி வைத்தார்/ இதில் கியாரா அத்வானி, ஜெயராம், அஞ்சலி, நவீன் சந்திரா, சுனில் உள்ளிட்ட பலர் ராம்சரணுடன் நடிக்கவுள்ளனர். ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன் ஆகியோர் இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களாக பணிபுரியவுள்ளனர்.

அரசியல் கலந்த த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தில் ராம் சரண் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 2022-ம் ஆண்டு இரண்டாம் பாதியில் இந்தப் படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in