ராஜமெளலியின் பாகுபலி 2 படப்பிடிப்பு தொடங்கியது

ராஜமெளலியின் பாகுபலி 2 படப்பிடிப்பு தொடங்கியது
Updated on
1 min read

ராஜமெளலியின் இயக்கத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பாகுபலி' படத்தின் 2ம் பாகத்துக்கான படப்பிடிப்பு தொடங்கியது.

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'. மரகதமணி இசையமைத்த அப்படத்துக்கு செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவான இப்படம் இந்தியாவில் தயாரான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்று சாதனை படைத்தது. முதல் பாகத்தின் படப்பிடிப்பின்போதே, இரண்டாம் பாகத்துக்கான சில காட்சிகள் படமாக்கப்பட்டு இருப்பதாக ராஜமெளலி தெரிவித்திருந்தார்.உலக அரங்கில் 'பாகுபலி' வெளியீட்டுக்கான பணிகள் நடைபெற்று வந்ததால், 2ம் பாகத்துக்கான படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று (டிசம்பர் 17) முதல் 'பாகுபலி' இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு மற்றும் இறுதிகட்டப் பணிகள் என அனைத்தையும் முடித்து 2016ம் ஆண்டு இறுதியில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in