டிச.23-ம் தேதி 'எஃப் 3' படப்பிடிப்பு தொடக்கம் 

டிச.23-ம் தேதி 'எஃப் 3' படப்பிடிப்பு தொடக்கம் 

Published on

'எஃப் 3' தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கவுள்ளது. இதன் படப்பூஜை இன்று நடைபெற்றது.

2019-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற தெலுங்குப் படம் 'எஃப் 2'. அனில் ரவிப்புடி இயக்கத்தில் வெங்கடேஷ், வருண் தேஜ், தமன்னா, மெஹ்ரீன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். முழுக்க காமெடிப் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் வசூல் ரீதியாக சுமார் 4 மடங்கு லாபத்தை அள்ளிக் கொடுத்தது.

'எஃப் 2' படத்தின் மாபெரும் வெற்றியால்தான், அப்படத்தின் இயக்குநர் அனில் ரவுப்புடிக்கு மகேஷ் பாபு நடித்த 'சரிலேரு நீக்கவெரு' படத்தின் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படமும் வெற்றியடைந்தது. இதனால் 'சரிலேரு நீக்கவெரு' படத்தைத் தொடர்ந்து 'எஃப் 3' படத்தின் கதையை அனில் உருவாக்கினார்.

'எஃப் 2' படத்தைத் தயாரித்த தில் ராஜூவே, 'எஃப் 3' படத்தையும் தயாரிக்கவுள்ளார். இதில் 'எஃப் 2' படத்தின் கூட்டணியே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது. இந்தப் படத்தின் பூஜை இன்று (டிசம்பர் 17) நடைபெற்றது. இதன் படப்பிடிப்பு டிசம்பர் 23-ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in