Published : 29 Nov 2019 08:02 PM
Last Updated : 29 Nov 2019 08:02 PM

பாதுகாப்பான இடம் என்று ஏதாவது இருக்கிறதா?: பிரியங்கா ரெட்டி மரணம் தொடர்பாக காஜல் கேள்வி

பாதுகாப்பான இடம் என்று ஏதாவது இருக்கிறதா? என்று பிரியங்கா ரெட்டி மரணம் தொடர்பாக காஜல் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டி காணாமல் போனதாகப் பெற்றோர் போலீஸில் புகார் அளித்த நிலையில் அவரது உடல் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் செய்தி இணைய வாசிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. #RIPPriyankaReddy, #JusticeForPriyankaReddy ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது. மேலும், பிரியங்கா ரெட்டி மரணத்துக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் தங்களுடைய இரங்கலையும், கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

பிரியங்கா ரெட்டி மரணம் தொடர்பாக முன்னணி நடிகையான காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பதிவில் “ஆத்திரம் வருகிறது. பாதுகாப்பான இடம் என்று ஏதாவது இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் பெண்கள் பாதிக்கப்படுவது சோகமாக இருக்கிறது.

தவறு செய்தவர்களுக்குக் கண்டிப்பாக மரண தண்டனை வேண்டும். (பெண்களின்) போதிய பாதுகாப்புதான் இப்போதைய தேவை. அது அவசரமாக மாறும் ஒரு சூழல் வரை காத்திருக்கக்கூடாது” என்று தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x