சிரஞ்சீவியின் அடுத்த படத்தின் பணிகள் தொடக்கம்

சிரஞ்சீவியின் அடுத்த படத்தின் பணிகள் தொடக்கம்
Updated on
1 min read

'சைரா நரசிம்மா ரெட்டி' படத்தைத் தொடர்ந்து, சிரஞ்சீவி நடிக்கும் அடுத்த படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளன.

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, சுதீப், அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சைரா நரசிம்மா ரெட்டி'. தெலுங்கில் இப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதர மொழிகளில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிரஞ்சீவியின் 151-வது படம்தான் 'சைரா நரசிம்மா ரெட்டி'. இதை அவரது மகன் ராம் சரண் தயாரித்திருந்தார். தற்போது 152-வது படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டன. இதையும் ராம் சரணே தயாரிக்கவுள்ளார். இதுவரை படப்பிடிப்பு இடங்கள் தேர்வு, நடிகர்கள் ஒப்பந்தம், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒப்பந்தம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வந்தனர்.

நேற்று (அக்டோபர் 8) படப்பூஜையுடன் கூறிய பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கொரட்டலா சிவா இயக்கும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக திரு, கலை இயக்குநராக சுரேஷ் செல்வராஜ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

சிரஞ்சீவியுடன் நடிக்கவுள்ளவர்கள் குறித்த அறிவிப்பு, படப்பிடிப்பு தொடங்கப்படும் அன்று அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

சிரஞ்சீயின் 152-வது படத்தின் பூஜை வீடியோ:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in