சமூக வலைதளங்களில் ‘பாகுபலி’க்கு பெரும் எதிர்பார்ப்பு

சமூக வலைதளங்களில் ‘பாகுபலி’க்கு பெரும் எதிர்பார்ப்பு

Published on

மிகவும் எதிர்பார்ப்புகளுடன் இன்று உலகம் முழுவதும் வெளியாகும் பாகுபலி திரைப்படத்துக்கு சமூக வலைதளங்களில் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

சுமார் 3 ஆண்டுகள் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட திரைப்படம் பாகுபலி இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. ‘நான் ஈ’ புகழ் இயக்குநர் ராஜமவுலி இயக்கி உள்ள இத்திரைப்படத்தில் பிரபாஸ், சத்யராஜ், நாசர், ராணா, அனுஷ்கா, தமன்னா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், ரூ. 250 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு, இன்று 4,000 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

இதுவரை இத்திரைப்படத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் 13 லட்சம் பேர் ‘லைக்’ செய்துள்ளனர். ட்விட்டரில் லட்சக்கணக்கானோர் பின் தொடர்கின்றனர். யூ-டியூபில் இதன் டிரைலர் 42 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. இதன் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு 40 சதவீதம் முடிவடைந்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in