பாகுபலி வெளியான தினத்தில் ரூ.60 கோடி வசூலித்து சாதனை

பாகுபலி வெளியான தினத்தில் ரூ.60 கோடி வசூலித்து சாதனை

Published on

தெலுங்கு திரைப்பட உலகின் பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் நேற்று முன்தினம் ‘பாகுபலி' திரைப்படம் வெளியானது. அத்திரைப்படம் வெளியான ஒரே நாளில் ரூ.60 கோடியை வசூல் செய்துள்ளதாகத் தக வல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு பாகங்கள் கொண்ட இப்படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாகி யுள்ளது. இதில் பிரபாஸ், ராணா டக்குபாதி, தமன்னா, அனுஷ்கா, நாசர், சத்யராஜ் எனப் பலர் நடித்துள்ளனர்.

"உலகம் முழுக்க வெளி யாகியுள்ள இப்படம் முதல் நாளில் ரூ.60 கோடியை வசூல் செய்துள்ளது. இந்த வார இறுதியில் இது ரூ.100 கோடியை வசூல் செய்து சாதனை படைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று சினிமா வர்த்தக ஆய்வாளர் திரிநாத் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் மட்டும் ரூ.15 கோடியை வசூல் செய் துள்ளது இப்படம். தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் வெளியாகியுள்ள இப்படம், நாடு முழுக்க சுமார் 4 ஆயி ரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப் பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in