கொரட்டாலா சிவா இயக்கத்தில் ராம் சரண்: 2018-ல் படப்பிடிப்பு துவக்கம்

கொரட்டாலா சிவா இயக்கத்தில் ராம் சரண்: 2018-ல் படப்பிடிப்பு துவக்கம்
Updated on
1 min read

கொரட்டாலா சிவா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு 2018-ம் ஆண்டு கோடை விடுமுறையில் துவங்கவுள்ளது.

'ஜனதா கேரேஜ்' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கொரட்டாலா சிவா 'பாரத் ஏனே நேனு' படத்தை இயக்கி வருகிறார். மகேஷ் பாபு நாயகனாக நடித்துவரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது தான் தொடங்கப்பட்டுள்ளது. 'ஸ்ரீமந்துடு' படத்தைத் தொடர்ந்து மகேஷ் பாபு - கொரட்டாலா சிவா இணைந்துள்ளதால், இதற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

'பாரத் ஏனே நேனு' படத்தைத் தொடர்ந்து ராம்சரண் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க தற்போதே ஒப்பந்தமாகியுள்ளார் கொரட்டாலா சிவா. ராம்சரணின் 'கோனிடேலா தயாரிப்பு நிறுவனம்' மற்றும் மேட்னி எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது.

இப்படத்துக்கான ஒப்பந்தம் போடப்பட்டு, அடுத்தாண்டு கோடை விடுமுறையிலிருந்து படப்பிடிப்பு தொடங்கப்படும் என அறிவித்துள்ளார்கள்.

தற்போது சுகுமார் இயக்கத்தில் உருவாகும் 'ரங்காஸ்தலம் 1985' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ராம்சரண். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in