Last Updated : 13 Nov, 2013 04:04 PM

 

Published : 13 Nov 2013 04:04 PM
Last Updated : 13 Nov 2013 04:04 PM

கைவிடப்பட்ட ஜுனியர் என்.டி.ஆர் படம்

ஜுனியர் என்.டி.ஆர் - கோர்ட்லா சிவா படம் கைவிடப்பட்டதாக அறிவித்திருக்கிறார்கள்.

தொடர் தோல்வியால் துவண்டு போயிருந்த பிரபாஸிற்கு, 'மிர்ச்சி' என்ற படம் மூலம் புத்துணர்ச்சி அளித்தவர் இயக்குநர் கோர்ட்லா சிவா. பிப்ரவரி 2013ல் இப்படம் வெளியானது.

அதனைத் தொடர்ந்து கோர்ட்லா சிவா, தனது அடுத்த படத்திற்கு இவ்வளவு தாமதம் ஆகும் என்று எண்ணி இருக்கமாட்டார். ராம் சரண் - கோர்ட்லா சிவா இணைந்து படம் பண்ணுவதாக இருந்த நிலையில், கதையில் கருத்து மாற்றம் வர, படம் கைவிடப்பட்டது.

அப்போது கோர்ட்லா சிவாவிற்கு ஜுனியர் என்.டி.ஆர் கைகொடுத்தார். இருவரும் இணைந்து படம் பண்ண இருப்பதாக செய்திகள் வெளியாகின. 'ராமய்யா வஸ்தவாய்யா' படத்தி படுதோல்வி அடைந்திருப்பதால், தனது அடுத்த படத்தின் கதையில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார் ஜுனியர் என்.டி.ஆர்.

தற்போது சந்தோஷ் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார் ஜுனியர் என்.டி.ஆர். அப்படம் முடியவே மே 2014 ஆகிவிடுமாம். ஆனால், கோர்ட்லா சிவா அடுத்தாண்டு முதல் மகேஷ் பாபு நடிக்கும் படத்தினை இயக்கவிருக்கிறார்.எனவே, ஜுனியர் என்.டி.ஆர் படத்தினை அவர் இயக்க வாய்ப்பில்லை என்பதால் படம் கைவிடப்பட்டது.

“நாங்கள் இருவருமே வெவ்வேறு படங்களில் பிஸியாக இருப்பதால், தற்போதைக்கு இணைந்து படம் பண்ண வாய்ப்பில்லை” என்று கூறியிருக்கிறார் கோர்ட்லா சிவா.

மகேஷ் பாபுவை வைத்து கோர்ட்லா சிவா இயக்கும் படத்தினை யு.டிவி நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இது தெலுங்கு திரையுலகில் யு.டிவி நிறுவனம் தயாரிக்கும் முதல் படமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x