

நடிகை சன்னி லியோன், தனது வளர்ச்சிக்கு தென்னிந்திய திரைப்படங்கள் உதவும் எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மம்மூட்டியுடன் ‘மதுர ராஜா’ என்ற படத்தில் ஒரு பாடலில் மட்டும் நடனமாடினார் சன்னி லியோன். தமிழில், ‘வீரமா தேவி’, மலையாளத்தில் ‘ரங்கீலா’ உள்ளிட்ட படங்களில் நாயகியாகவும் நடிக்கிறார். இந்தியில், திகில் காமெடிப் படமான ‘கோக கோலா’ படத்தில் நடிக்கவுள்ளார்.
இதுபற்றிப் பேசியுள்ள சன்னி லியோன், "நாம் செய்யும் வேலையை ரசிக்கும்போது கடினமாகத் தெரியாது. தென்னிந்திய சினிமாத்துறை, கண்டிப்பாக எனது வளர்ச்சிக்கு உதவும். ஒரு புது கலாச்சாரத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
இன்று நல்ல கதைதான் மக்களிடையே பிரபலமாகும். ஒவ்வொரு வகையான படத்துக்கும் இங்கு இடமுண்டு. அதற்கான ரசிகர்களும் உள்ளனர்" என்று கூறியுள்ளார்.