அதிவேகமாக ரூ.500 கோடியை வசூலித்த முதல் இந்திய படம்: அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ சாதனை!

அதிவேகமாக ரூ.500 கோடியை வசூலித்த முதல் இந்திய படம்: அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ சாதனை!
Updated on
1 min read

ஹைதராபாத்: அதிவேகமாக ரூ.500 கோடியை வசூலித்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது ‘புஷ்பா 2’. இந்தியில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் முதல் நாள் ரூ.294 கோடியை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. இரண்டு நாள்களை சேர்த்து ரூ.449 கோடியை வசூலித்தது. இந்நிலையில் தற்போது ரூ.500 கோடி வசூலை தாண்டியுள்ளது. கிட்டதட்ட 3 நாட்களில் ரூ.500 கோடி வசூலை எட்டியுள்ளது. இதன் மூலம் இந்திய சினிமாவில் அதிகவேகமாக ரூ.500 கோடி வசூலித்து முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது ‘புஷ்பா 2’. இந்தி வெர்ஷனில் மட்டும் ரூ.205 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியானது ‘புஷ்பா 1’. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் வியாழக்கிழமை (டிச.5) வெளியானது. ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சாம்.சி.எஸ்.பின்னணி இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in