“எனக்கு அழைப்பு விடுக்கப்படும் படங்களில் மட்டும் நடிக்கிறேன்” - நடிகை ஊர்வசி

“எனக்கு அழைப்பு விடுக்கப்படும் படங்களில் மட்டும் நடிக்கிறேன்” - நடிகை ஊர்வசி
Updated on
1 min read

திருவனந்தபுரம்: “கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நான் ஏன் சூப்பர் ஸ்டார் படங்களில் நடிக்கவில்லை என என்னிடம் கேட்கிறார்கள். எனக்கு அழைப்பு விடுக்கப்படும் படங்களை தேர்வு செய்து நான் நடிக்கிறேன். வேறு யார் அந்தப் படத்தில் நடிக்கிறார்கள் என்பது குறித்து நான் ஒருபோதும் கவனம் செலுத்துவதில்லை” என நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அண்மையில் அளித்த பேட்டியில், “ஹேமா கமிட்டி குறித்து பேசுகையில், “இது வெறும் ஒரு கமிட்டி அறிக்கை மட்டுமல்ல. நீண்ட காலமாக இருக்கும் பிரச்சினை. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நான் ஏன் சூப்பர் ஸ்டார் படங்களில் நடிக்கவில்லை என என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய பதில் என்னவென்றால், இயக்குநரும், தயாரிப்பாளரும் என்னுடைய குடும்ப உறுப்பினர்களைப் போல.எனக்கு அழைப்பு விடுக்கப்படும் படங்களை தேர்வு செய்து நான் நடிக்கிறேன். வேறு யார் அந்தப் படத்தில் நடிக்கிறார்கள் என்பது குறித்து நான் ஒருபோதும் கவனம் செலுத்துவதில்லை” என தெரிவித்துள்ளார்.

மேலும் திரைத்துறையிலிருந்து தான் ஓரங்கட்டப்படவில்லை என்றும் அவர் விளக்கியுள்ளார். முன்னதாக மலையாளத்தில் ஊர்வசி - பார்வதி நடிப்பில் ‘உள்ளொழுக்கு’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தமிழில், ‘ஜே.பேபி’ படத்தில் ஊர்வசியின் நடிப்பு பாராட்டப்பட்டது. அண்மையில் பிரசாந்தின் ‘அந்தகன்’ படத்தில் ஊர்வசி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in