முதல் நாளில் ரூ.25 கோடியை வசூலித்த நானியின் ‘சூர்யாவின் சனிக்கிழமை’

முதல் நாளில் ரூ.25 கோடியை வசூலித்த நானியின் ‘சூர்யாவின் சனிக்கிழமை’
Updated on
1 min read

ஹைதராபாத்: நானி, எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘சூர்யாவின் சனிக்கிழமை’ (சரிபோதா சனிவாரம்) திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.25 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘அந்தே சுந்தரானிகி’ படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா. இவர் இயக்கியுள்ள படம் ‘சரிபோதா சனிவாரம்’ (Saripodhaa Sanivaaram). இந்தப் படத்துக்கு தமிழில் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை தயாரித்த டிவிவி என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நானி, எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன், முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். வெகுஜன ரசிகர்களுக்கான ‘மாஸ்’ திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் நேற்று (ஆக.29) திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.25 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் ரூ.90 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. | > விமர்சனத்தை வாசிக்க: சூர்யாவின் சனிக்கிழமை Review: ‘மாஸ்’ நானி, மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா காம்போவில் படம் எப்படி?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in