பாவனா திருமணம்: பிரியங்கா சோப்ராவின் நெகிழ்ச்சியான வாழ்த்து

பாவனா திருமணம்: பிரியங்கா சோப்ராவின் நெகிழ்ச்சியான வாழ்த்து
Updated on
1 min read

நடிகை பாவனாவுக்கும், கன்னட சினிமா தயாரிப்பாளரும், தொழிலதிபருமான நவீனுகும் இன்று (திங்கட்கிழமை) திருச்சூரில் திருமணம் நடைபெற்றது. பாவனாவின் திருமண நிகழ்வில் பல்வேறு திரைப்பட நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா, பாவனாவின் திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "உங்களுக்கு திருமண வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இது உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் மிகப் பெரிய படியாக இருக்கக் போகிறது. அதிர்ஷ்டத்துக்கு வாழ்த்துகள். நீங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர், தைரியமானவர், சிறந்த பெண்மணி. உங்களை மிகவும் ரசித்திருக்கிறேன். மிகுந்த அன்பு, எப்போதும்'' என்று கூறியுள்ளார்.

நடிகை பாவனா கடந்த ஆண்டு படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் செல்லும் போது கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் மீட்கப்பட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்தச் சம்பவம் பெரும் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக மலையாள நடிகர் திலீப் மற்றும் சிலரை போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in