மீண்டும் படம் இயக்கும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்

மீண்டும் படம் இயக்கும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்
Updated on
1 min read

'இனம்' படத்தைத் தொடர்ந்து, 'குஞ்சலி மராக்கர் 4' என்ற படத்தை இயக்கவுள்ளார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

'இனம்' படத்தை இயக்கிய பின், மீண்டும் பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார் சந்தோஷ் சிவன். சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'ஸ்பைடர்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், மீண்டும் இயக்குநர் பொறுப்புக்கு திரும்பியுள்ளார் சந்தோஷ்சிவன். மம்முட்டி நடிக்கும் 'குஞ்சலி மராக்கர்' 4 என்ற தலைப்பிடப்பட்டுள்ள படத்தை இயக்கவுள்ளார். இதனை ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இது கோழிக்கோடு சாமூத்திரியின் குஞ்சலி மாரிக்கரைப் பற்றிய கதையாகும். இப்படத்தின் கதையை டி.பி.ராஜீவன் மற்றும் சங்கர் ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். மம்முட்டியோடு நடிக்கவிருப்பவர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in