Published : 16 Jul 2023 06:40 AM
Last Updated : 16 Jul 2023 06:40 AM

ஊர்வசியிடம் அதிகம் கற்றுக்கொண்டேன்: சனுஷா வியப்பு

கொச்சி: தமிழில், ரேனிகுண்டா, நாளை நமதே, எத்தன், அலெக்ஸ் பாண்டியன், கொடி வீரன்உட்பட பல படங்களில் நடித்தவர், மலையாளநடிகை சனுஷா. இவர் 6 வருடங்களுக்குப் பிறகுமலையாளத்தில் ‘ஜலந்தரா பம்ப்செட் சின்ஸ் 1962’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஏன் இந்த இடைவெளி? என்று கேட்டபோது கூறியதாவது:

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்ததால், மலையாளத்தில் நடிக்கவில்லை. இப்போது ‘ஜலந்தரா பம்ப் செட்’ படத்தில் எனக்குப் பிடித்த ஊர்வசி, இந்திரன்ஸ் ஆகியோருடன் நடித்திருக்கிறேன். ஊர்வசியுடன் நடிப்பைப் பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஒவ்வொரு காட்சியிலும் தனதுரியாக்‌ஷன்கள் மூலம் மயக்கிவிடுகிறார். அவரிடம் அதிகம்கற்றுக்கொண்டேன். இன்னும்கற்க நிறைய இருக்கிறது.அவர் சிறந்த நடிகை என்பதில் சந்தேகமே இல்லை” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x