மேலாளர் ஏமாற்றினாரா? - ராஷ்மிகா மந்தனா விளக்கம்

மேலாளர் ஏமாற்றினாரா? - ராஷ்மிகா மந்தனா விளக்கம்
Updated on
1 min read

ஹைதராபாத்: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மேலாளராக இருந்த கிரண் என்பவர், அவரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்துவிட்டதாகவும் இதனால் அவரை ராஷ்மிகா நீக்கிவிட்டதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகாவும் கிரணும் இணைந்து விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களுக்கு இடையே எந்த மோதலும் இல்லை. நாங்கள் சுமூகமாகவே பேசி பிரிந்துவிட்டோம். இனி இருவரும் சுதந்திரமாக வேலை செய்ய முடிவெடுத்துள்ளோம். நாங்கள் பிரிந்தது பற்றி வெளிவரும் வதந்திகளில் உண்மையில்லை” என்று தெரிவித்துள்ளனர். ராஷ்மிகா, இப்போது ரன்பீர் கபூருடன் நடித்துள்ள ‘அனிமல்’ படத்தை முடித்துவிட்டார். அடுத்து ‘புஷ்பா 2’, ‘ரெயின்போ’ படங்களில் நடித்து வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in