நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையில் தர்ஷனா

நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையில் தர்ஷனா
Updated on
1 min read

ஹைதராபாத்: ‘மூணே மூணு வார்த்தை’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், தர்ஷனா ராஜேந்திரன். அடுத்து ‘கவண்’, ‘இரும்புத்திரை’ உட்பட சில படங்களில் நடித்தார். மலையாளத்தில் ‘இருள்’, ‘ஹிருதயம்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். விபின் தாஸ் இயக்கிய ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ என்ற பெண் மைய படம் மூலம் இன்னும் பிரபலமான இவர், இப்போது தெலுங்கில் அறிமுகமாகிறார். பிரவீன் கண்ட்ரேகுலா இயக்கும் புதிய படத்தில் இவர் அனுபமா பரமேஸ்வரனுடன் இணைந்து நடிக்கிறார். இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in