திரைப்பட இயக்குநர் கோவையில் மரணம்:

திரைப்பட இயக்குநர் கோவையில் மரணம்:
Updated on
1 min read

திரைப்பட இயக்குநர் குருதனபால், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

சென்னை ரங்கராஜன் பகுதியைச் சேர்ந்தவர் குருதனபால் (58). திரைப்பட இயக்குநர். மனைவி உமாதேவி. 2 மகள்கள் உள்ளனர். இவர், உன்னை நினைத்து பாட்டுப் படித்தேன், தாய்மாமன், பெரியமச்சான், மாமன்மகள் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

கடந்த 14-ம் தேதி, கோவையில் உள்ள தனது நண்பர்களைப் பார்க்க வந்த அவருக்கு திடீரென இதய பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.

கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, திரைப்பட இயக்குநர்கள் எம்.கே.ராஜூ, லோகேசன், யூனிட் மேலாளர் பொள்ளாச்சி ரத்தினம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள மின்மயானத்தில் அவரது உடல் வெள்ளிக்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in