Published : 10 Apr 2024 05:18 AM
Last Updated : 10 Apr 2024 05:18 AM

இந்தியாவில் வெளியாகிறது ‘த பாய் அண்ட் த ஹெரான்’

டோக்யோ: புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குநர் ஹயாவோ மியாசாகி இயக்கத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம், ‘த பாய் அண்ட் த ஹெரான் (The Boy and the Heron). சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருதை இந்த ஆண்டு வென்ற இந்தப் படம் ஹயாவோ மியாசாகியின் (Hayao Miyazaki), 12 வது திரைப்படம். இவர் இயக்கும் அனிமேஷன் படங்களுக்கு உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இதுதான் அவரது கடைசி படம் என்று கூறப்படுகிறது.

இந்தப் படம் மற்ற நாடுகளில் கடந்த வருடம் ஜூலை மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றாலும் இந்தியாவில் வெளியாகவில்லை. இந்நிலையில், 9 மாதங்களுக்குப் பிறகு ஆங்கில சப்டைட்டிலுடன் இப்போது இந்தியாவில் வெளியாக இருக்கிறது. இதை வார்னர் பிரதர்ஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், ரிலீஸ் தேதியை அறிவிக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x