பிரிட்னியின் பாடல்களை திருடிய ஆள்மாறாட்ட மேனேஜர்

பிரிட்னியின் பாடல்களை திருடிய ஆள்மாறாட்ட மேனேஜர்
Updated on
1 min read

பிரபல பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸின் அசல் மேனேஜர் லாரி ருடால்ஃப் என்பவர். ஒரு திருடன், தன்னை லாரி என்று கூறிக்கொண்டு, பிரிட்னியின் இசை நிறுவனத்திடம் பேசியுள்ளார். அவரை நம்பி பிரிட்னியின் வெளிவராத பல பாடல்களை இசை நிறுவனம் அனுப்பியுள்ளது.

தொடர்ந்து சந்தேகத்துக்கிடமான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு வக்கீல் என்றும், அறிவார்ந்த சொத்து சம்பந்தமான சட்டங்களை படித்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. ஸ்பியர்ஸின் இசை லேபிலான ஆர்.சி.ஏ ரெக்கார்ட் நிறுவனத்துக்கு, இந்த மோசடிக்காக உருவாக்கப்பட்ட போலி ஈமெயில் முகவரியிலிருந்து அவர் ஈமெயில் அனுப்பியுள்ளார்.

ஈமெயில் முகவரிகளை சரியாக கவனிக்காமலேயே நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பாடல்களை அனுப்பியுள்ளனர். மொத்தம் 49 டிஜிட்டல் ஃபைல்கள் (பாடல்கள்) திருடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in