“என் படங்​களை ஓடிடி​யில் பார்த்துவிட்டு பாராட்டு​வ​தா?” - அனுராக் காஷ்யப் கோபம்

இயக்குநர் அனு​ராக் காஷ்யப்

இயக்குநர் அனு​ராக் காஷ்யப்

Updated on
1 min read

என் திரைப்​படங்​களை மக்​கள் திரையரங்​கு​களில் பார்க்​காத​போது கோபம் வரு​கிறது என்று இயக்​குநரும் நடிகரு​மான அனுராக் காஷ்யப் தெரி​வித்​துள்​ளார்.

அவர் அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் இயக்கிய ‘கேங்ஸ் ஆஃப் வாஸிபூர், அக்​லி, தேவ் டி போன்ற படங்​கள் அருமை என்று சொல்​கிறார்​கள். ஆனால் அவை வெளி​யான​ போது திரையரங்​கு​களில் சென்று பார்த்​தவர்​கள் மிகக் குறைவு. இப்​போது இப்​படிச் சொல்​லும் போது, கோப​மும் வருத்​த​மும் தான் வரும். நான் அவர்​களிடம், ‘இந்தப் படத்தை எங்கே பார்த்​தீர்​கள்?’ என்று கேட்​பேன். யாருமே திரையரங்​கு​களில் பார்த்​திருக்க மாட்​டார்​கள்.

ஒரு திரைப்​படத்தை மக்​கள் பார்த்​து, மற்​றவர்​களிடம் பரிந்துரைக்கும் அளவுக்​கு, திரையரங்​கு​களில் போது​மான காட்சிகள் வழங்கப்பட வேண்​டும். ஆனால், திரையரங்கு உரிமையாளர்​களே அந்த வாய் ​மொழி விளம்​பரம் உரு​வாகும் வாய்ப்பை வழங்குவதில்​லை. இதன் விளை​வாக, இந்​தப் படங்களைப் பார்க்க முடி​யாத பார்​வை​யாளர்​கள் ஓடிடி தளங்களில் பார்ப்​ப​தற்கே பழகிவிடுகிறார்​கள்.

இது புதிய பார்வையாளர்​களை உரு​வாக்​கும் சூழலைப் பாதிக்கிறது. மாறாக, பிரம்​மாண்ட திரைப் ​படங்​களுக்​கான பார்வை​யாளர்​களை மட்​டுமே உரு​வாக்குகிறீர்​கள். அப்​படி இருந்தால், அத்​தகைய திரைப் ​படங்​களே தொடர்ந்து தயாரிக்கப்படும். அவை மிக​வும் அதிக செல​வில் உரு​வாகின்​றன. மேலும், அவற்​றின் வெற்​றி– தோல்வி விகித​மும் மிகப் பெரிய ஆபத்​தைக் கொண்​டது.

‘துரந்​தர்’ போன்ற வெற்​றிப்​ படம் உரு​வாகும் போது, அதே நேரத்தில் 5 பெரிய பட்​ஜெட் படங்​கள் தோல்​வியடையக்​ கூடும். ஆனால், உள்​ளடக்​கத்தை மைய​மாகக் கொண்ட திரைப்​படங்​கள் அதிக செல​வானவை அல்ல. அவற்​றுக்கு வாய் ​மொழி விளம்​பரம் உரு​வாகும் வகை​யில் நேர​மும் வாய்ப்​பும் வழங்​கப்பட வேண்​டும். இவ்​வாறு அனு​ராக் காஷ்யப் தெரிவித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p><em>இயக்குநர் அனு​ராக் காஷ்யப்</em></p></div>
Maa Behen: சமூகம் உருவாக்கிய ‘சூனியக்காரிகள்’ ரேகா, ஜெயா, சுஷ்மா | திரை தேவதைகள் 21

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in