

விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தை இயக்கிய வம்சி பைடிபள்ளி அடுத்து இயக்கும் படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கிறார். இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். ‘ஜவான்’ படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் 2-வது இந்தி படம் இது.
இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மூலம் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. சல்மான் கான், நயன்தாரா தொடர்பான காட்சிகள் படமாகி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க, ‘துரந்தர்’ மூலம் கவனிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் அக் ஷய் கன்னா, மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் ஆகியோரிடம் பேசி வருகின்றனர். இதில் ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாகத் தெரிகிறது. நடிகர் அரவிந்த் சாமி முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.