

நடிகர் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருப்பதாகவும் விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் கடந்த சில ஆண்டுகளாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு ஐஸ்வர்யா ராயோ, அபிஷேக் பச்சனோ கருத்துச் சொன்னதில்லை.
இந்நிலையில் அபிஷேக் பச்சன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “நானும் ஐஸ்வர்யா ராயும் திருமணம் செய்துகொள்ளும் முன்பு, எங்கள் திருமணம் எப்போது என்பதை அவர்களே முடிவு செய்தார்கள். திருமணம் முடிந்த பிறகு, எப்போது விவாகரத்து செய்வோம் என்பதையும் அவர்களே முடிவு செய்கிறார்கள். இது முட்டாள்தனமானது.
எங்கள் இருவருக்கும் உண்மை நிலை தெரியும். நாங்கள் மகிழ்ச்சியாக, ஆரோக்கிய மாக இருக்கிறோம். அதில் உண்மை இல்லை என்பதால் இதுபோன்ற வதந்திகள் எங்களைப் பாதிப்பதில்லை.
அதே நேரம் என்னையும் என் குடும்பம் பற்றியும் பொய்யான, முட்டாள்தனமான விஷயங்களைப் பேசுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று எச்சரித்துள்ளார்.