ரூ.100 கோடி கேட்டு நவாசுதீன் சித்திக் மானநஷ்ட வழக்கு

ரூ.100 கோடி கேட்டு நவாசுதீன் சித்திக் மானநஷ்ட வழக்கு
Updated on
1 min read

பிரபல இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் தமிழில் ரஜினிகாந்தின், ‘பேட்ட’ படத்தில் நடித்துள்ளார். இவர் மனைவி ஆலியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

நவாசுதீனும் அவர் மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தனர். கடந்த சில மாதங்களாக நவாசுதீன் மற்றும் அவர் தாய் மீது ஆலியா குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார். நவாசுதீன் சகோதரர் சமாஷ் சித்திக்கும் பரபரப்பு புகார்களைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆலியா மற்றும் தன் சகோதரர் சமாஷ் சித்திக் ஆகியோருக்கு எதிராக ரூ.100 கோடி கேட்டு நவாசுதீன் சித்திக் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வரும் 30ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in