3 நாட்களில் ரூ.10 கோடியை மட்டுமே வசூலித்த அக்‌ஷய் குமாரின் ‘செல்ஃபி’

3 நாட்களில் ரூ.10 கோடியை மட்டுமே வசூலித்த அக்‌ஷய் குமாரின் ‘செல்ஃபி’
Updated on
1 min read

அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள ‘செல்ஃபி’ திரைப்படம் 3 நாட்களில் ரூ.10.30 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு ஜீன் பால் லால் இயக்கத்தில் பிரித்விராஜ், சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் வெளியான படம் ‘ட்ரைவிங் லைசன்ஸ்’. மலையாளத்தில் வரவேற்பை பெற்ற இப்படத்தின் அதிகாரபூர்வ தழுவலை ஏற்று பாலிவுட்டில் உருவான படம் ‘செல்ஃபி’. ராஜ் மேத்தா இயக்கியுள்ள இப்படத்தில் அக்‌ஷய் குமார், இம்ரான் ஹாஷ்மி இருவரும் இணைந்து நடித்துள்ளனர். தவிர நுஷ்ரத் பருச்சா, டயானா பென்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

தர்மா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்த இப்படம் முதல் நாள் வசூலாக ரூ.2.55 கோடியை மட்டுமே வசூலித்து அதிர்ச்சியை கொடுத்தது. அக்‌ஷய் குமார் படங்களில் மிகவும் குறைந்த முதல் நாள் வசூலை ஈட்டிய படமாக செல்ஃபி 'வரலாறு' படைத்துள்ளது.

இரண்டாவது நாள் படம் ரூ.3.80 கோடியையும், மூன்றாவது நாளான நேற்று படம் ரூ.3.95 கோடியையும் வசூலித்தது. அதன்படி 3 நாட்கள் முடிவில் படம் ரூ.10.30 கோடியை வசூலித்துள்ளது. ரூ.100 கோடி பட்ஜெட்டில் படம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. | வாசிக்க > தொடர் தோல்விகள்... என்னதான் ஆச்சு அக்‌ஷய் குமார் படங்களுக்கு? - ஒரு பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in