

மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது 6 மாடி வீட்டை ஓட்டலாக மாற்றுவதற்கான கட்டுமான நடவடிக்கையில் ஈடுபட்டதால் சோனு சூட்டுக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு எதிராகநகர குடிமையியல் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்குதள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி பிருதிவிராஜ் சவான், சட்டம் சட்டத்தின்படி நடப்பவர்களுக்கே உதவி செய்யும். எதுவாக இருந்தாலும் மாநகராட்சியை அணுகலாம் உத்தரவிட்டார்.