இனிமையான குரலின் இழப்பை உணர்வேன்: எஸ்பிபி மறைவுக்கு ஷாரூக் கான், சல்மான் கான், ஆமிர் கான் இரங்கல்

இனிமையான குரலின் இழப்பை உணர்வேன்: எஸ்பிபி மறைவுக்கு ஷாரூக் கான், சல்மான் கான், ஆமிர் கான் இரங்கல்
Updated on
1 min read

எஸ்பிபி மறைவுக்கு ஷாரூக் கான், சல்மான் கான், ஆமிர் கான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு எஸ்பிபி காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

எஸ்பிபி மறைவுக்கு இந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்கள் தெரிவித்துள்ள இரங்கல்களின் தொகுப்பு:

ஷாரூக் கான்: இந்த இழப்பில் வாடும் எஸ்பி பாலசுப்பிரமணியம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு என் அனுதாபங்கள். சாதனைப் பாடகரின் ஆன்மா சாந்தியடையட்டும். அவரது இனிமையான குரலின் இழப்பை உணர்வேன்.

சல்மான் கான்: எஸ்பி பாலசுப்பிரமணியம் மறைவைப் பற்றிக் கேள்விப்பட்டு மனமுடைந்து போனேன். உங்களுடைய மறுக்க முடியாத இசை மரபின் மூலம் நீங்கள் என்றும் உயிர் வாழ்வீர்கள். அவரது குடும்பத்துக்கு என் அனுதாபங்கள்.

ஆமிர் கான்: எஸ்பி பாலசுப்பிரமணியம் மறைவைப் பற்றிக் கேள்விப்பட்டு ஆழ்ந்த வருத்தமடைந்தேன். அவர் குடும்பத்துக்கு என் மனமார்ந்த அனுதாபங்கள். நமது காலகட்டத்தின் மிகச்சிறந்த திறமையாளர்களில் ஒருவரை நாம் இழந்துவிட்டோம். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in