சோயா அக்தரின் ‘கல்லி பாய்’ சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை

சோயா அக்தரின் ‘கல்லி பாய்’ சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை
Updated on
1 min read

ரன்வீர் சிங் நாயகனாகவும் ஆலியா பட் நாயகியாகவும் நடித்த சோயா அக்தர் இயக்கிய கல்லி பாய் திரைப்படம் இந்தியா சார்பாக சிறந்த வெளிநாட்டுப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிறந்த அயல்நாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் பரிந்துரைக்காக 28 திரைப்படங்கள் போட்டியில் இறங்கின. இதில் 1 படத்தைத் தேர்வு செய்வதற்கான பணி கொல்கத்தாவில் நடைபெற்றது. சூப்பர் டீலக்ஸ், ஒத்த செருப்பு, வடசென்னை ஆகிய 3 தமிழ் படங்களும் போட்டியிட்டன. தேர்வுக்குழு தலைவராக 9 தேசிய விருதுகள் வென்ற அபர்ணா சிங் செயல்பட்டார்.

இதில் கல்லி பாய் திரைப்படம் ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டது.

இந்த விருது முன்னதாக சிறந்த அயல்மொழித் திரைப்பட விருது என்று அழைக்கப்பட்டது. பிறகு சிறந்த சர்வதேச திரைப்பட விருது என்று பெயர் மாற்றம் பெற்றது.

கல்லி பாய் திரைப்படம் கடந்த பிப்ரவரி 14ம் தேதி ரிலீஸ் ஆனது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது இத்திரைப்படம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in