பிரதமர் மோடியுடன் பாலிவுட் பிரபலங்கள் சந்திப்பு: ராஜ்கபூர் திரைப்பட விழாவுக்கு அழைப்பு!

பிரதமர் மோடியுடன் பாலிவுட் பிரபலங்கள் சந்திப்பு: ராஜ்கபூர் திரைப்பட விழாவுக்கு அழைப்பு!
Updated on
1 min read

புது டெல்லி: மறைந்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் ராஜ்கபூரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு டிசம்பர் 14-ம் தேதி நடைபெறும் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பாலிவுட் திரைப்பிரபலங்கள் நேரில் அழைப்பு விடுத்தனர்.

ரன்பீர் கபூர், ஆலியா பட், கரீனா கபூர், சயீஃப் அலி கான், கரிஷ்மா கபூர், ரித்திமா கபூர் சாஹ்னி, ஆதார் ஜெயின், அர்மான் ஜெயின் மற்றும் நீது கபூர் உள்ளிட்ட பலர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தனர். பழம்பெரும் நடிகர் ராஜ்கபூரின் நூற்றாண்டு விழா டிசம்பர் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நடைபெறும் திரைப்பட விழாவில் கந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர். இந்த சந்திப்பின்போது, பாலிவுட் நடிகர்களுடன் மோடி உரையாடினார்.

இது தொடர்பாக நடிகை கரீனா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “தாத்தா ராஜ்கபூரின் பெருமையை பறைசாற்றும் வகையிலான நிகழ்வில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படியான ஒரு சிறந்த சந்திப்புக்கு பிரதமருக்கு நன்றி.

உங்களின் ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியம். தாத்தா ராஜ் கபூரின் கலைத்திறன், தொலைநோக்கு பார்வை, இந்திய சினிமாவுக்கான அவரது பங்களிப்பை கொண்டாடும் இந்த நூற்றாண்டு நிகழ்வு வரும் தலைமுறைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ‘ராஜ்கபூர் 100-வது திரைப்பட விழா’ மூலம் அவரை நினைவுகூர்வதுடன், இந்திய சினிமாவில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தை விவரிக்கும் சிறந்த படங்களை திரையிடுவதில் பெருமை கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in