ராவணனாக நடிக்க யாஷ் சம்பளம் ரூ.150 கோடி!

ராவணனாக நடிக்க யாஷ் சம்பளம் ரூ.150 கோடி!

Published on

மும்பை: பிரபல இந்தி இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையை 3 பாகங்களாகத் திரைப்படமாக இயக்க இருக்கிறார். இதில் ராமராக ரன்பீர் கபூரும் ராவணனாக யாஷும் நடிக்க இருக்கின்றனர். சீதையாகச் சாய் பல்லவி நடிக்க இருக்கிறார். முதலில் ஆலியா பட் சீதையாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. அவர் விலகியதால், சாய் பல்லவி நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரியில் தொடங்குகிறது. நடிகர் யாஷ், ஜூலை மாதம் இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார். அவர் தொடர்பான காட்சிகள் இலங்கையில் படமாக்கப்படுகின்றன. இந்தப் படத்தில் நடிக்க நடிகர் யாஷ் சம்பளமாக ரூ.150 கோடி கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் கால்ஷீட் எத்தனை நாள் தேவைப்படுகிறது என்பதைப் பொறுத்து இந்தச் சம்பளம் மாறும் என்று பாலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in