‘ஆதிபுருஷ்' பார்த்தபிறகுதான் புரிந்தது...- ட்விட்டரில் கலாய்த்த சேவாக்

‘ஆதிபுருஷ்' பார்த்தபிறகுதான் புரிந்தது...- ட்விட்டரில் கலாய்த்த சேவாக்
Updated on
1 min read

மும்பை: ’ஆதிபுருஷ்’ படம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் கடந்த ஜூன் 16 அன்று திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் குறித்து பிரபலங்கள் பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் தற்போது அந்த வரிசையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக்கும் இணைந்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சேவக், 'ஆதிபுருஷ் பார்த்தபிறகு தான் எனக்கு புரிந்தது, ஏன் கட்டப்பா ‘பாகுபலியை’ கொன்றார் என்று’ என தெரிவித்துள்ளார். சேவாக்கின் இந்த கருத்துக்கு பிரபாஸ் ரசிகர்கள் பலரும் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.

’ஆதிபுருஷ்’ திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் சேர்த்து உலக அளவில் ரூ.340 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தொடர் எதிர்மறை விமர்சனங்களால் விடுமுறை நாட்களுக்குப் பிறகு படத்தின் வசூல் கடுமையாக குறைந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in