Published : 14 Oct 2017 08:54 PM
Last Updated : 14 Oct 2017 08:54 PM
இனிமேல் வருடத்திற்கு எனது 2 படங்கள் வெளியாகும் என சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
பொன்.ராம் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் சிவகார்த்திகேயன். தீபாவளி வருவதையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது சிவகார்த்திகேயன் பேசியதாவது:
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். தீபாவளி என்றாலே பட்டாசு தான். அதனால் உங்களது குடும்பத்தோடு பாதுகாப்பாக பட்டாசு வெடியுங்கள். உங்களது குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
நான் உங்களை எல்லாம் சந்தித்து ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டது. ஆனால், இனிமேல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சந்திப்பேன். மேலும், ஒவ்வொரு வருடத்திற்கும் இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன். ஆனால், ஒவ்வொரு படமும் 100 முதல் 150 நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெறுகிறது. பெரிய கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பதால் இவ்வாறு ஆகிவிடுகிறது.
ஆனால், அடுத்தாண்டு முதல் வருடத்திற்கு இரண்டு படங்கள் வெளியாக வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு படங்களைத் தேர்வு செய்யவுள்ளேன்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT