Published : 24 Aug 2017 08:21 PM
Last Updated : 24 Aug 2017 08:21 PM
ஓவியாவை அப்படியே இமிடேட் செய்து 'பிக் பாஸ்' வீட்டிற்குள் சுஜா வரூணி செய்து வருவதாக ஓவியா ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா வெளியேறியவுடன், புதிதாக பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பட்டவர் சுஜா வரூணி. பிக் பாஸ் வீட்டிற்குள் ஓவியா இருக்கும் போதே, தொடர்ச்சியாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு ஆதரவாக ட்வீட்களை வெளியிட்டு வந்தவர் சுஜா வரூணி என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் சுஜா வரூணி வந்ததிலிருந்தே தொடர்ச்சியாக ஓவியாவைப் போலவே பேசுவது, செய்கைகள் என மொத்தமாக இமிடேட் செய்து வருகிறார். இதனை பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் பலருமே, ஓவியாவைப் போல இமிடேட் செய்தால் அவராக ஆக முடியாது என்று தெரிவித்தார்கள்.
சமூகவலைத்தளத்தில் பிக் பாஸ் ரசிகர்களிடமும் சுஜாவின் செயல்பாடுகள் பெரும் எதிர்ப்பை உண்டாக்கி இருக்கிறது. இன்றைய (ஆகஸ்ட் 24) ப்ரோமோ வீடியோவில் ஓவியாவைப் போலவே பிக் பாஸிடம் சுஜா வரூணி பேசும் "இங்கு யாருக்குமே என்னை பிடிக்கவில்லை. தனிமையாக உணர்கிறேன்" என்ற வீடியோவைக் குறிப்பிட்டு, இப்படியெல்லாம் பேசினால் நீங்கள் ஓவியாவா? என்ற கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
மேலும், சுஜாவுக்கு ஆதரவாக சிலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். அவருடைய பேச்சு வழக்கமே அப்படித்தான். அவரும் திரையுலகில் மிகவும் கடினப்பட்டு, தன்னுடைய இடத்தை பதிவு செய்து வருகிறார் என்றும் கூறிவருகிறார்கள்.
தொடர்ச்சியாக சுஜா வரூணி மற்றும் காஜல் இருவரின் செயல்பாடுகளே, பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி சமூகவலைத்தளங்களில் பேச்சுப் பொருளாகி வருகிறது. மேலும், பிக் பாஸ் வீட்டிலிருந்து ஓவியா வெளியேறியிலிருந்து 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மிகவும் போரடிக்கிறது. சில நாட்கள் பார்த்ததுக் கூட இல்லை என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
TRP -யில் விஜய் தொலைக்காட்சி தங்களுடைய ஏற்றத்தை தக்க வைத்துக் கொள்ள, 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் வரும் வாரத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரவும் முடிவெடுத்து இருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT