Published : 01 Aug 2017 08:36 PM
Last Updated : 01 Aug 2017 08:36 PM
சட்ட மீறல் நம் தரப்பில் கூடாது என்று தனது நற்பணி மன்றத்தினருக்கு கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெரம்பலூரில் உள்ள பள்ளிகளில் அழுகிய முட்டைகளை அளித்து வருவதாக கமல் நற்பணி மன்றத்தினருக்கு தகவல் கிடைத்தது. அதனை கமல் நற்பணி மன்றத்தினர் ஆய்வு செய்து, ஆதாரத்துடன் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கமலுக்கும் ஆதாரங்களுடன் அனுப்பிவைத்திருக்கிறார்கள்.
இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில், ''பெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல் இயக்கத்திற்கு பெருமையே. எனினும் இயக்க வக்கீல்களின் ஆலோசனைப்படி செயல்படவும். சட்டமீறல் நம் தரப்பில் கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT