Last Updated : 17 Aug, 2017 03:54 PM

 

Published : 17 Aug 2017 03:54 PM
Last Updated : 17 Aug 2017 03:54 PM

யாரை வேண்டுமானாலும் சரியாகவும் தவறாகவும் காட்டலாம்: பிக் பாஸ் குறித்து ஷக்தி

யாரை வேண்டுமானாலும் சரியாகவும், தவறாகவும் காட்டலாம் என்று பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து சமீபத்தில் வெளியேறிய ஷக்தி தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டிலிருந்து ஓவியா வெளியேறியதைத் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி-ல் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

சமீபத்தில் பிக் பாஸ் வீட்டிலிருந்து சக்தி வெளியேற்றப்பட்டார். தற்போது புதிதாக சுஜா வரூனி மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளார்கள். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து ரைசா மற்றும் காயத்ரி இருவரில் ஒருவர் வெளியேற்றப்பட்டவுள்ளார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஷக்தி தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக்கில் பிக் பாஸ் பற்றிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பார்வையாளர்களின் ஆதரவுக்கும், ஆலோசனைகளுக்கும் நன்றி. பெண்களை அவமதிக்குமாறு ஏதாவது சொல்லியிருந்தால் அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் எப்போதும் பெண்களுக்கு பாதகமாக நடந்ததில்லை. அவர்களுக்கு உறுதுணையாகத் தான் இருந்துள்ளேன்.

எது எப்படியோ, பிக் பாஸில் கலந்துகொண்டது சிறந்த அனுபவமாக இருந்தது. 24 மணிநேரத்தில் ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணி நேரம் நடந்தவைகளை மட்டுமே நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். அதில் யாரை வேண்டுமானாலும் சரியாகவும், தவறாகவும் காட்டலாம். ஆனால் இங்கு யாரும் நல்லவர்களோ, கெட்டவர்களோ அல்ல.

சரியான நேரத்தில் நான் வெளியே வந்தது மகிழ்ச்சி. சூழல்களோடு போராட நான் தயார். ஆனால் நம்மை உசுப்பேற்ற உருவக்கப்பட்ட சூழலில் நான் போராட முடியாது. ஒருவரோடு நேருக்கு நேர் மோதவும் தயார். ஆனால் எனது, மற்றவர்களது மனசாட்சிக்கு எதிராக மோத அல்ல. இப்போதுதான் உண்மையான ஆட்டம் தொடங்கியுள்ளது. விஜய்டிவிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் நன்றி.

இவ்வாறு ஷக்தி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x