Published : 30 Sep 2017 08:27 PM
Last Updated : 30 Sep 2017 08:27 PM

அறம் படத்துக்கு உயிரூட்டியுள்ளார் நயன்தாரா: ஜிப்ரான்

'அறம்' படத்துக்கு நயன்தாரா உயிரூட்டியுள்ளதாக, அப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.

'மகளிர் மட்டும்' படத்தைத் தொடர்ந்து 'அறம்' படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார் ஜிப்ரான். தற்போது 'அறம்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அப்படத்தின் பின்னணி இசையை முடித்துவிட்டு, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஜிப்ரான் கூறியிருப்பதாவது:

'மகளிர் மட்டும்' குறித்து கனிவாகப் பேசிய அனைவருக்கும் எனது தனிப்பட்ட நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நேற்றிரவும், 'அறம்' படத்தின் கடைசி கட்ட ஒலிக் கலவை பணிகளை முடித்தோம். இந்த அற்புதமான படத்தில் பங்காற்ற வைத்த இறைவனுக்கு மிகவும் நன்றி.

வளர்ச்சியடையாத இந்தியாவின் ஒரு பகுதியிலிருந்து வந்தவனாக, இன்னும் அந்தப் பகுதியில் வேரூன்றியிருப்பவனாக என்னால் இந்தப் படத்தோட என்னை நிறைய சம்பந்தப்படுத்திக் கொள்ள முடிகிறது. மக்கள் கேட்க வேண்டிய பிரச்சினையைப் பற்றி இந்தப் படம் பேசுகிறது. படம் பெரிய திரையில் வந்ததும் அதன் நோக்கம் நிறைவேறும் என நம்புகிறேன்.

இயக்குநர் கோபி, தயாரிப்பாளர் ராஜேஷ், ஓம்பிரகாஷ், ரூபன், பீட்டர் ஹெய்ன், சவுந்தர், அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள், முக்கியமாக படத்துக்கு உயிரூட்டிய நயன்தாரா என எனது மொத்த குழுவுக்கும் நன்றி. திரைக்கு வருவதற்கு முன்னாலேயே எனக்கு முழு திருப்தியையும், மனநிறைவையும் தந்திருக்கும் இன்னொரு படம் இது

இவ்வாறு ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x