Published : 05 Sep 2017 03:47 PM
Last Updated : 05 Sep 2017 03:47 PM
மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டது தொடர்பாக கமல் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பொதுநல மாணவர் எழுச்சி இயக்க சேலம் மாவட்டப் பொறுப்பாளரும், பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் மாணவியுமான வளர்மதி, கடந்த ஜூலை மாதம் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து இன்று (செப்டம்பர் 5) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், "வளர்மதி வளர், பௌர்ணமியை நோக்கி. மயங்கா நீதிதேவர்க்கும் வணக்கம்" எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT