Published : 01 Sep 2017 07:37 PM
Last Updated : 01 Sep 2017 07:37 PM
அனிதா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் விவேக் வேதனை தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இவருடைய தற்கொலைக் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விவேக் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
உன் குடும்பத்தை தேற்ற எனக்கு வழி தெரியவில்லை சகோதரி. ஆயினும் உன் வலி புரிகிறது. எனினும் தற்கொலை எப்படியம்மா தீர்வாகும்?. இதற்கு மேல் என்ன படிக்க?ஒரு அருமை மாணவியை, அன்பு மகளை, எதிர்கால மருத்துவரை தமிழகம் இழந்துவிட்டது
இவ்வாறு விவேக் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT